Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரஷ்யா- உக்ரைன் போர்: மேற்கு நாடுகளின் தலைவர்களுடன் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

ரஷ்யா-  உக்ரைன் போர்: மேற்கு நாடுகளின் தலைவர்களுடன்  பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
, செவ்வாய், 1 மார்ச் 2022 (00:02 IST)
மேற்கு நாடுகளின் தலைவர்களுடன் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்
யுக்ரேன், ரஷ்யா இடையிலான மோதல் குறித்து மேற்கு நாடுகளின் தலைவர்களுடன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசியிருக்கிறார்.
 
இரு நாடுகளுக்கு இடையிலான நெருக்கடியான நிலை குறித்து விவாதிக்க வருமாறு அவர் தமது நட்பு நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.
 
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஐரோப்பிய ஆணையத் தலைவர் வூர்சுலா ஃபொண்டெர்லயன், ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்ல்ஸ் மைக்கேல், பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோங், ஜெர்மன் ஆட்சித்துறைத் தலைவர் ஓலாஃப் ஷோல்ட்ஸ், இத்தாலி பிரதமர் மரியோ ட்ராகி, ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, நேட்டோ செகரட்டரி ஜெனரல் யென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், போலாந்து அதிபர் ஆண்டர்ஜெஸ் டூடா, ருமேனியா அதிபர் கிளாஸ் ஐஹானிஸ் மற்றும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகியோருக்கு இந்த அழைப்பை அமெரிக்க அதிபர் பைடன் விடுத்துள்ளார்.
 

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொடர்ந்து உங்களுக்காகப் பயணிப்பேன்- முதல்வர் ஸ்டாலின்