Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நீயா நானா … ரபாடாவுக்கு பூம்ராவுக்கும் இடையே நடக்கும் போட்டி!

நீயா நானா … ரபாடாவுக்கு பூம்ராவுக்கும் இடையே நடக்கும் போட்டி!
, திங்கள், 9 நவம்பர் 2020 (10:37 IST)
ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் எடுக்கப்போகும் பந்துவீச்சாளர் யார் என்ற போட்டியில் பூம்ராவுக்கும் ரபாடாவுக்கும் இடையே போட்டி நடந்து வருகிறது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் துருப்புச் சீட்டுகளில் ஒன்றாக கருதப்படுபவர் பூம்ரா. ஆனால் இந்த சீசன் ஆரம்பத்தில் அவர் பந்துவீச்சில் அதிக ரன்கள் கொடுத்தார். இது அவர் மேலான அழுத்தத்தை அதிகமாக்கியது. இதற்கு முக்கியக் காரணமாக சொல்லப்பட்டது அவரை 10 ஓவர்களுக்கு மேல் பந்து வீச அழைத்தது. அப்போது பந்து பழையதாகி விடுவதால் அவரால் ஸ்விங் செய்ய முடியவில்லை. இதனால் அவர் மீண்டும் தொடக்க ஓவர்களை வீச அனுமதிக்கப்பட்டார்.

அதிலிருந்து அவரின் பழைய ஆட்டம் மீண்டும் வந்தது. பேட்ஸ்மேன்களை திணறடித்து விக்கெட்களைக் கைப்பற்றினார். இந்நிலையில் நேற்றைய போட்டியில் நான்கு விக்கெட்களை சாய்த்து வெறும் 15 ரன்களை மட்டுமே கொடுத்தார். இதன்மூலம் 27 விக்கெட்களை சாய்த்து பர்ப்பிள் கேப்பை அவர் பெற்றுள்ளார்.

இதையடுத்து நேற்று நடந்த எலிமினேட்டர் போட்டியில் டெல்லி அணியின் ரபாடா மீண்டும் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்களை பெற்றார். இதன் மூலம் அவர் 29 விக்கெட்கள் பெற்று முதலிடத்தில் உள்ளார். இறுதி போட்டியில் இவர்கள் இருக்கும் அணியே மோதிக் கொள்கிறது என்பதால் இருவருக்கும் இடையே பர்ப்பிள் கேப் வாங்குவது தொடர்பாக மிகப்பெரிய போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்த ஆட்டம் போதுமா கொழந்த.. இறுதி போட்டிக்கு முன்னேறிய டெல்லி!