Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தோனிக்கு இந்த சீசனில் பிரச்சனையாக இருக்கப் போவது இதுதான்… முன்னாள் சிஎஸ் வீரர் கருத்து!

தோனிக்கு இந்த சீசனில் பிரச்சனையாக இருக்கப் போவது இதுதான்… முன்னாள் சிஎஸ் வீரர் கருத்து!

vinoth

, வெள்ளி, 15 மார்ச் 2024 (13:19 IST)
ஐபிஎல் 2024 சீசன் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்க உள்ள நிலையில் சி எஸ் கே 10 அணிகளும் தயாராகி வருகின்றனர். பெரும்பாலான வீரர்கள் தங்கள் அணிகளோடு இணைந்து பயிற்சியை தொடங்கி விட்டனர். சி எஸ் கே அணியைப் பொறுத்தவரை கேப்டன் தோனி கடந்த மாத இறுதியிலேயே சென்னை வந்து பயிற்சியை தொடங்கிவிட்டார்.

தற்போது 42 வயதாகும் தோனி இந்த சீசனின் வயதான கேப்டனாக உள்ளார். இந்நிலையில் இந்த சீசனோடு அவர் ஓய்வு பெற்றுவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. கடந்த சீசனில் முழங்கால் பிரச்சனையால் அவதிப்பட்டார். அதனால் அவரால் அதிக நேரம் பேட் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டது. எல்லா இன்னிங்ஸ்களிலும் கடைசி பேட்ஸ்மேனாக களமிறங்கினார்.

தற்போது அறுவை சிகிச்சை செய்துகொண்டு அணிக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் இந்த சீசனில் அவருக்கு விக்கெட் கீப்பிங் செய்வதுதான் பெரிய பிரச்சனையாக இருக்கும் என முன்னாள் சி எஸ் கே வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வரட்டா மாமே.. டுர்ர்ர்..! டெல்லி அணிக்கு டாட்டா காட்டிய எங்கிடி, ஹாரி ப்ரூக்! – அதிர்ச்சியில் ரசிகர்கள்!