Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சொதப்பிய இந்திய பேட்ஸ்மேன்கள்… நேற்றைய போட்டியில் நடந்த ட்விஸ்ட்!

சொதப்பிய இந்திய பேட்ஸ்மேன்கள்… நேற்றைய போட்டியில் நடந்த ட்விஸ்ட்!

vinoth

, சனி, 3 ஆகஸ்ட் 2024 (07:25 IST)
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கொழும்பு மைதானத்தில் நேற்று நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த 8 விக்கெட்களை இழந்து 230 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் பதும் நிசாங்கே மற்றும் துனித் வெல்லாலகே ஆகியோர் அரைசதம் அடித்தனர்.

இதையடுத்து ஆடிய இந்திய அணிக்கு மிகச்சிறந்த தொடக்கத்தை ரோஹித் ஷர்மா கொடுத்தார். ஆனால் அதன் பிறகு இந்திய பேட்ஸ்மேன்கள் வரிசையாக விக்கெட்களை இழந்தனர். இதனால் இந்திய அணி எளிதாக வெற்றி பெற்றுவிடும் என்ற சூழலில் இருந்து போராடிதான் வெற்றி பெறுமோ என்ற சூழல் உருவானது.

இந்நிலையில் கடைசி கட்டத்தில் ஒரே ஓவரில் ஷிவம் துபே மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்ததால் இந்திய அணி 230 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம் இந்த போட்டி டையில் முடிந்தது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இலங்கை கொடுத்த இலக்கு.. அடுத்தடுத்து விழுந்த இந்தியாவின் 2 விக்கெட்டுக்கள்..!