Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதம் நடத்தி இருக்கலாம். ஆனால் எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை- பிரதமர் மோடி

PM Modi
, சனி, 12 ஆகஸ்ட் 2023 (14:29 IST)
நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நடைபெற்ற நிலையில், மணிப்பூரில் விவகாரத்தில்  மத்திய பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள்  நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது.

இதன் மீதான விவாதம் கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தொடங்கிய   நிலையில்,  காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி  உரையாற்றியிருந்தார்.

இதையடுத்து, , நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்  நேற்றுடன்  நிறைவடைந்த நிலையில், இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல்  ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த  நிலையில்,  நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடித்துள்ளோம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மேற்குவங்க மாநிலத்தில் பஞ்சாயத்து ராஜ் பரிஷத் தின விழாவில் பிரதமர் மோடி காணொலி மூலம் மபேசினார்.

அதில், ''மத்திய பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்களிப்பதற்கு எதிர்க்கட்சிகள் அச்சமடைந்தன. மணிப்பூர் விவகாரம் குறித்து  விவாதம் நடத்தி இருக்கலாம். ஆனால் எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை…. எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த  நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடித்துள்ளோம்'' என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாங்குநேரியில் மாணவர் வெட்டப்பட்ட சம்பவம்; சட்டம் அதன் கடமையைச் சரியாகச் செய்யும்- முதல்வர் மு.க.ஸ்டாலின்