Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றி : 5000 கிமீ பாயும் என தகவல்!

missiles
, வெள்ளி, 16 டிசம்பர் 2022 (11:59 IST)
5000 கிலோ மீட்டர் தூரத்திற்கு அணு ஆயுத ஏவுகணைகளை தாங்கிச் சென்று துல்லியமாகத் தாக்கும் அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப் பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்திய எல்லையில் சீனா படையினர் மோதல் போக்கை கடைபிடித்து வரும் நிலையில் இந்திய ராணுவத்தில் அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இது குறித்து இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் கூறியபோது 5000 கிலோ மீட்டர் தூரத்திற்கு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை தாங்கிச் சென்று தாக்கும் அக்னி-5 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
சீனாவின் எந்த பகுதிக்கும் இந்த ஏவுகணையால் தாக்க முடியும் என்றும் அதேபோல் ஐரோப்பிய நாடுகளையும் தாக்கக் கூடிய அளவுக்கு வல்லமை படைத்தது இந்த ஏவுகணை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அமைச்சர் மகன் திருமண வரவேற்பிற்கு கேரளாவில் இருந்து யானை??