Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆக்ஸிஜன், உயிர் காக்கும் கருவி தயாரா இருக்கட்டும்! – மத்திய அரசு அறிவுறுத்தல்!

Corona
, ஞாயிறு, 25 டிசம்பர் 2022 (11:05 IST)
உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால் மருத்துவ வசதிகளை உறுதி செய்ய மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

கடந்த சில காலமாக குறைந்து வந்த கொரோனா தற்போது மீண்டும் வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்தியாவிலும் ஒரு சிலருக்கு புதிய வைரஸின் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மத்திய, மாநில அரசுகள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் துரிதம் காட்டி வருகின்றன.

இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சக கூடுதல் செயலாளர் மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் கொரோனா மருத்து உள்கட்டமைப்பை தயார்நிலையில் வைத்திருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்ஸிஜன் மற்றும் உயிர் காக்கும் கருவிகளை தயார் நிலையில் வைத்திருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மருத்துவ தரத்திலான ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் ஆலைகள் அனைத்தும் முழுமையாக செயல்படுவதை உறுதிப்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Edit By Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோவிலை உடைத்து அன்னதானத்தை தூக்கிய யானைகள்! – கோவையில் பரபரப்பு!