Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரே நாளில் 6 ஆயிரத்திற்கும் அதிகமான பலிகள்! – பாதிப்பு குறைந்தும் அதிர்ச்சியளிக்கும் இந்திய நிலவரம்!

ஒரே நாளில் 6 ஆயிரத்திற்கும் அதிகமான பலிகள்! – பாதிப்பு குறைந்தும் அதிர்ச்சியளிக்கும் இந்திய நிலவரம்!
, வியாழன், 10 ஜூன் 2021 (09:37 IST)
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்புகள் குறைந்து வந்த நிலையில் தினசரி பலி எண்ணிக்கை திடீர் உச்சத்தை தொட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 2 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் தற்போது குறைய தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 94,052 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 2,91,83,121 ஆக உயர்ந்துள்ளது.

ஒரே நாளில் 6,148 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  3,59,676 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 2,76,55,493 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 11,67,952 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை இந்தியா முழுவதும் 23,90,58,360 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாநிலங்களுக்கு கூடுதலாக 25 கோடி தடுப்பூசிகள் - மத்திய அரசு !