Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தடுப்பூசிக்கு அனுமதி கோரி ஜான்சன் & ஜான்சன் விண்ணப்பம்

தடுப்பூசிக்கு அனுமதி கோரி ஜான்சன் & ஜான்சன் விண்ணப்பம்
, வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (14:46 IST)
ஜான்சன் & ஜான்சன் தனது கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி கோரி மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளது. 

 
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு உள்ள நிலையில் பல நாடுகள் பல்வேறு விதமான தடுப்பூசிகளை தயாரித்து மக்களுக்கு வழங்கி வருகின்றன. அவ்வகையில் அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்த தடுப்பூசி சமீபத்தில் அமெரிக்காவின் மருந்து கட்டுப்பாடு துறையால் அங்கீகரிக்கப்பட்டது. 
 
மற்ற தடுப்பூசிகள் இரண்டு டோஸ்களுக்கு பிறகே உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நிலையில் இந்த தடுப்பூசி ஒரே டோசில் அதிகரிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஜான்சன் & ஜான்சன் தனது கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி கோரி மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளது. மத்திய அரசு இதற்கு விரைவில் பதில் அளிக்கும் என தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அவசர கால அனுமதி கோரும் நோவாவாக்ஸ் தடுப்பூசி