Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆக்ஸிஜன் முழுவதையும் எங்களுக்கே அளிக்க வேண்டும்! – கேரள முதல்வர் கோரிக்கை!

ஆக்ஸிஜன் முழுவதையும் எங்களுக்கே அளிக்க வேண்டும்! – கேரள முதல்வர் கோரிக்கை!
, செவ்வாய், 11 மே 2021 (08:21 IST)
கேரளாவில் ஆக்ஸிஜன் இருப்பு குறைந்து வருவதால் மாநிலத்தில் உற்பத்தியாகும் ஆக்ஸிஜனை முழுவதுமாக தங்களுக்கே வழங்க வேண்டும் என கேரள முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு வருவது பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பல்வேறு இடங்களில் ஆக்ஸிஜன் தயாரிப்பு ஆலைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் மாநிலங்கள் தயாரிக்கும் ஆக்ஸிஜனை மத்திய அரசு பெற்று பகிர்ந்தளித்து வருகிறது.

இந்நிலையில் கேரளாவில் கையிருப்பில் இருந்த 450 டன் ஆக்ஸிஜனில் தற்போது 86 டன் மட்டுமே மீதம் இருப்பதாகவும், அதனால் கேரளாவில் தயாரிக்கப்படும் 219 டன் ஆக்ஸிஜன் முழுவதையும் கேரளாவுக்கே வழங்க வேண்டும் என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் கோரிக்கை விடுத்துள்ளார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கொரோனாவை ஒழிக்க ருத்ராபிஷேக பூஜை… இணையத்தில் எழுந்த கேலி!