Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விருப்பத்தோடு உடலுறவு வைத்து கொண்டால் பாலியல் வன்கொடுமை ஆகாது! – ஒடிஷா உயர்நீதிமன்றம்!

விருப்பத்தோடு உடலுறவு வைத்து கொண்டால் பாலியல் வன்கொடுமை ஆகாது! – ஒடிஷா உயர்நீதிமன்றம்!
, செவ்வாய், 26 மே 2020 (13:40 IST)
ஒடிசாவில் பாலியல் வழக்கு ஒன்றின் விசாரணையில் தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம் விருப்பத்தோடு செக்ஸ் வைத்துக் கொள்வது பாலியல் வன்கொடுமை ஆகாது என்று கூறியுள்ளது.

ஒடிசா மாநிலம் கோராபுட் பகுதியை சேர்ந்தவர் அச்யுத் குமார், இவரும் அதே பகுதியை சேர்ந்த 19 வயது பெண்ணும் ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர். இருவரும் அடிக்கடி நெருங்கி பழகியல் நிலையில் உடல் ரீதியான உறவிலும் இருந்து வந்துள்ளனர். இதனால் அந்த பெண் இருமுறை கர்ப்பமாகி பிறகு கருக்கலைப்பும் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அச்யுத் குமார் மீது அந்த பெண் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளார். அதை தொடர்ந்து அச்யுத் குமார் கைது செய்யப்பட்டுள்ளார்

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட கீழ் நீதிமன்றம் அவரது ஜாமீனை ரத்து செய்த நிலையில், அச்யுத் ஒடிசா உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். இதனை விசாரித்த நீதிமன்றம் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்தாலும், அளிக்காவிட்டாலும் ஒரு பெண் மற்றும் ஆண் இருவரும் விருப்பப்பட்டு பாலியல் உறவு வைத்துக் கொள்வது பாலியல் வன்கொடுமை ஆகாது. அப்படியிருக்க பெண்கள் விருப்பத்தின் பேரில் பாலியல் உறவு வைத்துக் கொள்ளும் விவகாரங்களில் பாலியல் வன்கொடுமை வழக்கை பயன்படுத்துவது சரிதானா? என கேள்வியெழுப்பியது.

பிறகு அச்யுத் குமாருக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம் சம்பந்தபட்ட பெண்ணை மிரட்ட கூடாது என்றும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அறிகுறிகளே இல்லாமல் நோய் தொற்று: திணறும் அரசு!