கேரளாவுக்கு மட்டும் ஏன் இந்த பாரபட்சம்? ஏர் இந்தியா மீது சசிதரூர் குற்றச்சாட்டு..!

Siva
செவ்வாய், 30 செப்டம்பர் 2025 (08:36 IST)
கேரளாவின் நான்கு முக்கிய விமான நிலையங்களிலிருந்தும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவைகள் பெரிய அளவில் ரத்து செய்யப்பட உள்ளதாக வெளியான தகவல்கள், காங்கிரஸ் எம்.பி. சசி தரூரை ஆழ்ந்த கவலைக்கு உள்ளாக்கியுள்ளன.  இந்த விவகாரம் குறித்து ஏர் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கேம்ப்பெல் வில்சனுக்கு கடிதம் எழுதியுள்ளதாக சசி தரூர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
 
சசி தரூர் தனது கடிதத்தில், "ஊடகங்களில் பரவலாக வெளியாகும் தகவல்களின்படி, அக்டோபர் இறுதி முதல் மார்ச் மாதம் வரை திருவனந்தபுரம், கொச்சி, கோழிக்கோடு மற்றும் கண்ணூர் ஆகிய விமான நிலையங்களிலிருந்து கணிசமான விமானங்கள் திரும்ப பெறப்படுகின்றன" என்று குறிப்பிட்டுள்ளார்.
 
இந்தியாவில் அதிக விமான போக்குவரத்து கொண்ட மாநிலங்களில் கேரளா முக்கியமானது என்றும், குறிப்பாக வளைகுடா நாடுகளுக்கு அதிக அளவிலான சர்வதேச பயணிகள் இங்கு பயணிக்கின்றனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
 
ஏர் இந்தியாவின் இந்த சேவை குறைப்பு, வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்லும் ஊழியர்கள், மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் குடும்பத்தினருக்குப் பெரும் சிரமத்தை ஏற்படுத்தும் என்று சசி தரூர் எச்சரித்துள்ளார். மேலும், இது வர்த்தகம் மற்றும் சுற்றுலாவையும் பாதிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். 
 
ஏர் இந்தியா மற்றும் டாடா நிறுவனங்கள் கேரளாவிற்கு தகுந்த முக்கியத்துவத்தை கொடுக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொடர் முயற்சியில் தவெக... புதுச்சேரியில் விஜயின் ரோட் ஷோ நடக்குமா?....

காலை உணவுக்காக டிகே சிவகுமார் வீட்டுக்கு சென்ற சித்தாராமையா.. இருவரும் சமரசமா?

பழனிச்சாமி எனக்கு தலைவர் இல்ல!.. பதில் சொல்ல அவசியம் இல்ல!.. செங்கோட்டையன் அதிரடி!...

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கல்பாக்கம் அருகே கரை கடக்குமா? சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கை!

இன்று தங்கம் விலை சரிந்தாலும் ரூ.96000க்கும் மேல் ஒரு சவரன்.. இன்னும் இறங்குமா?

அடுத்த கட்டுரையில்
Show comments