Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கல்லூரி கட்டிடத்தில் இருந்து குதித்து மாணவி தற்கொலை!

கல்லூரி கட்டிடத்தில் இருந்து குதித்து மாணவி தற்கொலை!

Sinoj

, சனி, 9 மார்ச் 2024 (15:35 IST)
தெலுங்கானாவில் தனியார் கல்லூரி கட்டிடத்தில் இருந்து  குதித்து மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.
 
இங்கு பீமராம் பகுதியில் உள்ள் தனியார் கல்லூரி இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரியில் படித்து வந்த 17 வயது மாணவி, அங்குள்ள விடுதியில்  தங்கி படித்து வந்துள்ளார்.
 
இந்த நிலையில், கல்லூரியில்  கட்டிடத்தில் இருந்து குதித்து அவர் தற்கொலை செய்து கொண்டார். மாணவி சாஹித்யா என அடையாளம் காணப்பட்டு, அவரது உடல் கைப்பற்றப்பட்டு, பிரேத பரிசோதனைக்கு  நேற்று அனுப்பிவைக்கப்பட்டது.
 
மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி தெரியவில்லை. புகாரும் வராத நிலையில், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கடவுளின் தூதர் அவமதிப்பு: மாணவனுக்கு மரண தண்டனை!