Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

Laddu

Siva

, ஞாயிறு, 22 செப்டம்பர் 2024 (16:59 IST)
கர்நாடகா பால் கூட்டமைப்பிலிருந்து புதிய நெய் கொள்முதல் செய்ய இருப்பதாகவும், அந்த நிறுவனத்துடன் இணைந்து தினமும் 8 முதல் 9 லட்சம் லட்டுகள் தயாரித்து பக்தர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டிருப்பதாகவும் திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதியில் வழங்கப்படும் லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளா ராவ் செய்தியாளர்களிடம் பேசிய போது, லட்டுகளின் தரம் மேம்படுத்தப்படும் என்றும், லட்டுகளின் தரத்தில் இனி எந்த சமரசமும் செய்யப்பட மாட்டாது என்றும் கூறினார்.
மேலும், கர்நாடக கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தின் நந்தினி நிறுவனத்தின் நெய் பயன்படுத்தப்படும் என்றும், இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

பிரம்மோற்சவத்தின் போது தினமும் 8 முதல் 9 லட்சம் லட்டுகள் வரை தயாரித்து வழங்கத் தயாராக உள்ளதாகவும், 24 மணி நேரமும் லட்டு தயாரிக்க தேவையான நெய் உள்பட அனைத்து பொருட்களும் கொள்முதல் செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்."

Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்