Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அவையில் விசில் சத்தம்; பொறுமைய சோதிக்காதீங்க! – வெங்கய்யா நாயுடு எச்சரிக்கை!

அவையில் விசில் சத்தம்; பொறுமைய சோதிக்காதீங்க! – வெங்கய்யா நாயுடு எச்சரிக்கை!
, வெள்ளி, 30 ஜூலை 2021 (12:06 IST)
மாநிலங்களவையின் மாண்பை குலைக்கும் வகையில் நடப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வெங்கய்யா நாயுடு எச்சரித்துள்ளார்.

பாராளுமன்ற மக்களவை, மாநிலங்களவை தொடங்கி 8 நாட்களாக நடைபெற்று வரும் நிலையில், இரு அவைகளிலும் பெகாசஸ் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருவதால் தொடர்ந்து இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் தற்போது மாநிலங்களவை தொடங்கியுள்ள நிலையில் பேசிய வெங்கய்யா நாயுடு “அவையில் விசில் அடிப்பது, பதாதைகளை ஏந்தி அமளி செய்வது போன்ற புகார்கள் அடிக்கடி வருகின்றன. அவையின் பொறுமையை சோதிக்க வேண்டாம், அவையின் மாண்பை குலைக்கும் வகையில் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இது முதல் வெற்றிதான்; 50% இட ஒதுக்கீடு போராட்டம் தொடரும்! – டெல்லியில் டி.ஆர்.பாலு!