Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தொழிலாளர்கள் மீட்புப் பணி பிரமாண்ட வெற்றி - தேசிய பேரிடர் மேலாண்மை

uttrakhand
, செவ்வாய், 28 நவம்பர் 2023 (17:25 IST)
உத்தரகாண்ட் மாநிலத்தில்  முதல்வர் புஷ்கர் சிங் தமி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இங்குள்ள யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கம் தோண்டும் பணியின்போது விபத்து ஏற்பட்டது.
 
இந்தச் சுரங்கப் பாதை இடிந்து விழுந்ததில் உள்ளே 40 தொழிலாளர்கள் உள்ளே சிக்கியுள்ளனர்.
 
அதாவது,  4.5 கிமீ நீளமுள்ள சுரங்கப் பாதையில் 200 மீட்டர் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், மீட்பு பணிகளில் தேசிய மற்றும் மா நில பேரிடர் மீட்புப் படைகள் தீயணைப்புத்துறையினர் பணியாளர்களை மீட்கத் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
 
இந்த விபத்தில் யாரும் உயிரிழக்கவில்லை என தகவல் வெளியான நிலையில், அவர்களை மீட்கும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இடிபாடுகளில் சிக்கிக் கொண்டவர்களுக்கு தேவையான தண்ணீர், ஆக்சிஜன், உணவு ஆகியவை குழாய்கள் மூலம் செலுத்தப்பட்டு வருகிறது.
 
அனைத்து தொழிலாளர்களையும் பத்திரமாக மீட்க வேண்டும் என  கோரிக்கைகள் எழுந்துள்ள  நிலையில், உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களை இன்றிரவுக்குள் மீட்கப்படுவார்கள் என தகவல் வெளியானது.

இந்த நிலையில் தொழிலாளர்களை மீட்கும் முயற்சி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக தேசிய பேரியர் மேலாண்மை ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

அதில், தேசிய பேரியர் மீட்புப் படை மட்டுமின்றி ராணுவம், விமானப் படையை சேர்ந்த அதிகாரிகாளும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன. தொழிலாளர்களை மீட்க வேண்டி 58 மீட்டர் வரை துளையிடபடும் பணி முடிந்துள்ளது. இன்னும் 2  மீட்டர்கள் மீதமுள்ளது. ஒருவர் வெளியேற 3 ல் இருந்து 5 நிமிடங்கள் வரை ஆகும் நிலையில் 41 பேரும் வெளியேற 3 முதல் 4 மணி   நேரங்கள் ஆகலாம் என தெரிவித்துள்ளது.

மேலும், மீட்பு பணி பிரமாண்டமாக வெற்றி பெற்றுள்ளது எனவும், தொழிலாளர்ளின் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதனால் தொழிலாளர்களின் உறவினர்கள், தேச மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புகைப்பிடித்தலுக்கு எதிரான சட்டத்தை நீக்கம்? வலுக்கும் எதிர்ப்பு