Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பல நோய்கள் வராமல் காக்கும் அற்புத மூலிகை துத்தி கீரை !!

பல நோய்கள் வராமல் காக்கும் அற்புத மூலிகை துத்தி கீரை !!
துத்திக் கீரைகளில் கருந்துத்தி, சிறு துத்தி, நிலத்துத்தி, பெருந்துத்தி என சில வகைகள் இருக்கின்றன. அனைத்து வகை துத்தியும் ஒரே மாதிரியான மருத்துவ குணத்தை கொண்டுள்ளது.

துத்திக் கீரை உஷ்ணப் பிரதேசங்களில் நன்கு பயிராகும். மொத்தம் 20 வகையான துத்தி இனங்கள் உள்ளன. துத்திக் கீரையின் இலை, பூ, காய், முதலிய பாகங்கள் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.
 
துத்தி வேருடன் மூக்கிரட்டை வேரையும் சேர்த்து காய்ச்சி சிறிது தேன் கலந்து பருகிவர சிறு நீரக கோளாருகள் சுகமாகும். துத்தி இலையை சின்ன வெங்காயம்,  பாசிப் பருப்புச்சேர்த்து கூட்டாகச் செய்து சாப்பிட்டால் மலச்சிக்கல் நீங்கும். துத்தி இலையை அரைத்து தோசைமாவில் கலந்து தோசையாகச் செய்தும் சாப்பிடலாம்.
 
முழங்கால், கால் பாதம் போன்ற இடங்களில் சிறுநீரகக் கோளாறுகளால் வீக்கம் ஏற்படும்போது, துத்தி இலையை நீரில் போட்டு வேகவைத்து அதில் துணியை  நனைத்து வீக்கம் உள்ள இடங்களில் ஒத்தடம் கொடுத்தால் வீக்கம் குறையும்
 
துத்திக் கீரை இது சிறுநீரைப் பெருக்கும், மலத்தை இளக்கும். உடலுக்கு ஊட்டமளிக்கும். இக்கீரை குறிப்பிட்ட நோய்களைத் தீர்க்கும் தன்மை கொண்டது. உடலுக்கு  ஊட்டமளிப்பதால் நோய் எதிர்ப்புச்சக்தியை உண்டாக்கிப் பல நோய்கள் வராமல் காக்கிறது.
 
மூலநோய், கட்டிகள், புண்கள், முழுமையாக நிவாரணம் பெறு உதவுகின்றது. எலும்பு முறிவுக்குச் சிறந்த மருந்தாகப்பயன்படுகிறது. துத்திக் கீரையை உணவில்  சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் அளிக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சீத்தாபழத்தின் முக்கியமான மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம்...!!