Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தண்டுக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் என்ன நன்மைகள்...?

தண்டுக்கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் என்ன நன்மைகள்...?
, வியாழன், 6 ஜனவரி 2022 (10:30 IST)
தண்டுக்கீரை உடலுக்கு குளிர்ச்சி தன்மையை தரக்கூடியது. உடல் உஷ்ணத்தால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த கீரையை உணவை அடிக்கடி எடுத்து வந்தால் சிறந்த நிவாரணம் கிடைக்கும்.

தண்டுகீரை இரும்புச் சத்தும், கால்சியம் சத்தும் அதிகமாக இருப்பதால் ரத்த சோகை மூட்டு வலி, முதுகு வலி போன்ற தொந்தரவுகள் இருப்பவர்கள் எடுத்துக்கொள்வது மிகவும் சிறந்தது.
 
தண்டுகீரையில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கல் மூல நோய் போன்ற பிரச்சனை உள்ளவர்கள் அடிக்கடி உணவில் தொடர்ந்து எடுத்துக்கொண்டால் இப்பாதிப்புகள் குறைய தொடங்கும்.
 
கருப்பையில் தங்கி இருக்கக்கூடிய நச்சுக்கள் முற்றிலும் வெளியேறி கருப்பை சுத்தமாகும். எனவே நாளடைவில் பெண்கள் கருத்தரிக்கும் நிலை உண்டாகும். பெண்களுக்கு கருப்பை தொடர்பான பிரச்சனைகளை, குறைக்கக்கூடிய தன்மை, தண்டுக்கீரையில் அதிகம் உள்ளது.
 
தண்டுக்கீரையை உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் எடுத்துக்கொண்டு வரும் பொழுது ரத்த அழுத்தம் குறையத் தொடங்கும். தண்டுக்கீரை ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியது.
 
அதிக உடல் பருமன் கொண்டவர்கள் மற்றும் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு தண்டுக்கீரை ஒரு அருமருந்தாகும். இந்த கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது முதுமை தோற்றத்தை தடுத்து உடலை என்றும் இளமையாக வைத்துக்கொள்ள உதவும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சளியால் அவதிப்படும் குழந்தைகளுக்கு சில வீட்டு வைத்திய குறிப்புகள் !!