Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெந்தயத்தை பயன்படுத்தி என்னவெல்லாம் மருத்துவ நன்மைகளை பெறலாம்...!!

வெந்தயத்தை பயன்படுத்தி என்னவெல்லாம் மருத்துவ நன்மைகளை பெறலாம்...!!
, புதன், 5 ஜனவரி 2022 (13:31 IST)
வெந்தயக் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் நீரிழிவு நோய் ஏற்படாமல் தடுக்கலாம்.


நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அதன் தீவிரத்தன்மையினை கட்டுக்குள் கொண்டுவரும். இரத்தத்தில் கலந்துள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றும் செயல்களை செய்கிறது.
 
வெந்தயத்தில் உள்ள மருத்துவன் குணம் வெந்தயத்தை ஊறவைத்த நீரையோ அல்லது வெந்தயத்தை வேகவைத்த நீரையோ அருந்துபவர்களுக்கு சிறுநீரகங்களில் கற்கள் உருவாவதை தடுக்கும். சிறுநீர் கடுப்பு நீங்கி சிறுநீர் நன்கு பிரியும்.
 
நீரில் ஊறிய சிறிது வெந்தயத்தை பசும் தயிரில் கலந்து அரைத்து தலையில் நன்றாக தேய்த்து ஊறவைத்து சிறிது நேரத்திற்குப் பின்பு தலைக்கு குளிக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்துவர முடி உதிர்வு பிரச்சனைகள் நீங்கும். கூந்தலும் மென்மையாக வளரும்.
 
அன்றாடம் உண்கின்ற உணவு செரிமானம் ஆவதில் பிரச்சனை உள்ளவர்கள் வெந்தயத்தை நன்றாக அரைத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர செரிமான பிரச்சனைகள் முற்றிலும் நீங்கும்.
 
வெந்தயத்தை உலர்வாக அரைத்து தூளாக்கி அதனுடன் கஸ்தூரி மஞ்சள் கலந்து இரண்டையும் நன்கு கலந்து கொள்ளவும். அதனை அரிப்பு மற்றும் புண்கள் ஏற்பட்ட இடத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவவேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வர சரும நோய்கள் குணமடையும்.
 
அரிசி கஞ்சியில் சிறிது வேக வைத்த வெந்தயத்தை கலந்து உட்கொண்டு வரலாம். இதனால் உடல் பலம் பெறும் வயிற்றுப் புண் குணமடையும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பீட்ரூட் ஜுஸ் தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் முகப்பொலிவு கூடுமா...?