Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவு எதிரொலி: திருவள்ளூரில் 75 டாஸ்மாக் பார்களுக்கு சீல்

Webdunia
செவ்வாய், 23 மே 2023 (17:57 IST)
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவின் பெயரில் தமிழகம் முழுவதும் அனுமதி இன்றி இயங்கும் டாஸ்மாக் கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 
 
இன்று சென்னையில் நடைபெற்ற கலால் துறை அதிகாரிகளுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் மதுபான கூடங்களை கண்காணிக்க வேண்டும் என்றும் மதுபான கூடங்கள் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்குள் மூடப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என்றும் உரிமம் பெற்றவர்களுக்கு மட்டுமே மெத்தனால் விற்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தார். 
 
இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் அனுமதி இன்றி இயங்கிய 75 டாஸ்மாக் பார்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
திருவள்ளூர் மாவட்ட எஸ்பி சிபாஸ் கல்யாண் உத்தரவை தொடர்ந்து போலீசார் அதிரடி சோதனை நடத்தியதாகவும் இதில் 75 பார்கள் உரிமை இல்லாமல் நடத்தப்பட்டதை அடுத்து அந்த பார்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அயோத்தி கோயில் கும்பாபிஷேகத்திலும் திருப்பதி லட்டு விநியோகம்..! விசாரணை நடத்த வேண்டும் - தலைமை அர்ச்சகர்.!!

அனைத்து சாதி அர்ச்சகர்களுக்கு அவமரியாதை - இதுவா திராவிட மாடல் சமூக நீதி.? ராமதாஸ் கண்டனம்..!

மக்களை திசை திருப்புவதற்காக தமிழகத்திற்கு லட்டு பிரச்சனை- சீமான் பேச்சு!

தடையில்லா சான்று வக்பு நிலத்திற்கு கொடுக்க முடியாது -நவாஸ் கனி எம்பி பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments