Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஒரே நாளில் 702 பேருக்கு கொரோனா, 6 பேர் பலி.. இந்தியாவில் ஜேஎன்.1 பாதிப்பு அதிகரிப்பு

ஒரே நாளில் 702 பேருக்கு கொரோனா,  6 பேர் பலி.. இந்தியாவில் ஜேஎன்.1 பாதிப்பு அதிகரிப்பு
, வெள்ளி, 29 டிசம்பர் 2023 (08:10 IST)
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 72 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஆறு பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, மேற்குவங்கம், டெல்லி ஆகிய பகுதிகளில் கொரோனாவால் உயிர் பலியாகியுள்ளது என்றும் ஜே.என்.1 கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.  

தமிழகத்தில் மதுரை, திருச்சி, கோவை, திருவள்ளூர் மாவட்டங்களில் தலா ஒருவருக்கு புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இந்த நிலையில் புதிய கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்தம்  புனேவில் உள்ள தேசிய வைரால்ஜி ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அது குறித்து அறிக்கை வந்த பிறகு சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது

 இந்தியாவில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து பொதுமக்கள் மாஸ்க் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது

Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எம்ஜிஆர், ஜெயலலிதா, விஜயகாந்த்.. டிசம்பர் மாதம் மறைந்த அரசியல் தலைவர்கள்..!