Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டெங்கு காய்ச்சலால் 4 வயது சிறுமி உயிரிழப்பு.. தருமபுரியில் பரபரப்பு..!

டெங்கு காய்ச்சலால்  4 வயது சிறுமி உயிரிழப்பு.. தருமபுரியில் பரபரப்பு..!
, வியாழன், 28 செப்டம்பர் 2023 (09:16 IST)
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக டெங்கு காய்ச்சல் பரவியதாக கூறப்படும் நிலையில் தமிழக அரசின் சுகாதாரத்துறை டெங்கு காய்ச்சலில் இருந்து மக்களை பாதுகாக்க தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 
 
இந்த நிலையில் தர்மபுரியில் டெங்கு காய்ச்சல் காரணமாக 4 வயது சிறுமி உயிர் இழந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த நான்கு நாட்களாக அந்த சிறுமி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு  தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும் இந்த நிலையில் சிகிச்சையின் பலன் இன்றி அந்த சிறுமி உயிர் இழந்ததாகவும் தெரிகிறது. 
 
அபிநீதி என்ற  நான்கு வயது சிறுமி தர்மபுரி அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த நிலையில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொடர் விடுமுறையால் சொந்த ஊர் செல்லும் பொதுமக்கள்: கடும் போக்குவரத்து நெரிசல்..!