Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

5 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு: தயாராகும் தேசிய பேரிடர் மீட்பு படை..!

5 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு: தயாராகும் தேசிய பேரிடர் மீட்பு படை..!

Mahendran

, சனி, 18 மே 2024 (09:47 IST)
தமிழகத்தில் ஐந்து நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதை அடுத்து தேசிய பேரிடர் மீட்பு படை தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
கடந்த சில நாட்களாக தமிழகத்தில் டிசம்பர் மாதம் போல் கனமழை முதல் மிக கனமழை வரை சில இடங்களில் பெய்து வருகிறது என்பதும், குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்த மழை காரணமாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன. 
 
இந்த நிலையில் சற்றுமுன் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு என்று தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி கேரளாவில் மே 20 ஆம் தேதியிலிருந்து 22ஆம் தேதி வரை அதிக கன மழை பதிவாக வாய்ப்பிருப்பதால் சிவப்பு நிற எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தெற்கு அந்தமான் கடல், தென்கிழக்கு வங்க கடலின் சில பகுதிகளில், நிக்கோபார் தீவுகளில் நாளை தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
Edited by Mahendran
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!