Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அரசு பொதுத்தேர்வுக்கான அட்டவணை எப்போது? அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி

அரசு பொதுத்தேர்வுக்கான அட்டவணை எப்போது? அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி
, செவ்வாய், 14 நவம்பர் 2023 (14:56 IST)
அரசு பொதுத்தேர்வுக்கான அட்டவணை எப்போது? என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி அளித்துள்ளார்.
 
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்றும், ஆனால் அதே சமயம் பொதுத்தேர்வு நடைபெறுவதற்குள் பாடங்களை முடிக்க வேண்டிய சூழல் இருப்பதால் அதற்கு மாற்று வழிகளை ஆலோசித்து வருகிறோம் என்றும் அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டியில் கூறினார்.
 
அந்த வகையில் மழைக்காலம் முடிந்த பிறகு சனிக்கிழமைகளில் பள்ளிகளை இயக்க உள்ளோம் என்றும், அரசு பொதுத்தேர்வுக்கான அட்டவணை குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்றும் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தார்.
 
 பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் மாதமும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் மாதமும்  பொது தேர்வு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில்  அந்த சமயத்தில் தான்  நாடாளுமன்ற தேர்தலும் வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்.. 8 மாவட்டங்களுக்கு கனமழை: வானிலை எச்சரிக்கை