Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாத்தான்குளம் வழக்கு: எஸ்.ஐ. பால்துரை ஜாமீன் மனு தாக்கல்

Webdunia
செவ்வாய், 14 ஜூலை 2020 (08:17 IST)
சாத்தான்குளம் செல்போன் கடை வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு மர்மமான முறையில் மரணமடைந்த வழக்கு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது 
 
மதுரை ஐகோர்ட்டு உத்தரவுப்படி முதலில் சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை ஏற்று நடத்தி 10 காவல்துறை அதிகாரிகளை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடியிடம் இருந்து சிபிஐக்கு சமீபத்தில் மாறியது 
 
மேலும் சந்தேக மரணமாக பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு தற்போது கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த வழக்கில் முதலில் கைதான இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உள்பட 5 பேர் ஏற்கனவே ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளனர் என்பதும் இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது சாத்தான்குளம் வழக்கில் கைது செய்யப்பட்ட சிறப்பு எஸ்ஐ பால்துரை ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாக தெரிகிறது. தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளதாகவும் இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சிறப்பு எஸ்ஐ பால்துரை உடல்நலக் குறைவு காரணமாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பஹல்காமில் நூலிழையில் உயிர் தப்பிய சிங்கப்பூர் குடும்பம்.. பிரதமர் மோடிக்கு நன்றி..!

இந்தியாவை போரில் பாகிஸ்தான் தோற்கடித்தது என்பது தான் உண்மை: ஈரானில் ஷெபாஸ் ஷெரீப் பேட்டி..!

இந்தியாவில் முதல்முறையாக பிரெஞ்ச் நாட்டின் ஸ்மார்ட்போன் அறிமுகம்.. விலை எவ்வளவு? என்னென்ன வசதிகள்?

பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட இளம்பெண்.. 28 வார கருவை கலைக்க நீதிமன்றம் அனுமதி..!

மூன்றாவது உலகப்போர் வேணாம்னு நினைக்கிறேன்!? - ட்ரம்ப்க்கு ரகசிய எச்சரிக்கை விடுத்த ரஷ்யா!

அடுத்த கட்டுரையில்
Show comments