Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மூலிகை பெட்ரோல்: ராமர் பிள்ளையின் அடுத்த அதிரடி!

மூலிகை பெட்ரோல்: ராமர் பிள்ளையின் அடுத்த அதிரடி!
, புதன், 9 செப்டம்பர் 2020 (20:55 IST)
மூலிகை பெட்ரோல்: ராமர் பிள்ளையின் அடுத்த அதிரடி!
இந்தியா முழுவதும் மூலிகை பெட்ரோல் விற்பனை செய்வதற்கான உரிமையை ராமர்பிள்ளை மதுரையைச் சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளதாகவும் லாபத்தில் 30 சதவீதம் கமிஷன் என்ற அடிப்படையில் இந்த ஒப்பந்தம் போடப்பட்டு உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது 
 
ராஜபாளையம் அருகே உள்ள மம்சாபுரம் என்ற பகுதியைச் சேர்ந்த ராமர் பிள்ளை கடந்த 20 வருடங்களுக்கு முன் மூலிகையில் இருந்து பெட்ரோல் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த பெட்ரோல் தயாரிப்பு குறித்து பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்கள் வெளிவந்தன 
 
ராமர் பிள்ளையின் கண்டுபிடித்த கண்டுபிடிப்பை மத்திய அரசின் பெட்ரோலிய அமைச்சகம் ஏற்றுக்கொள்ளவில்லை. இருப்பினும் அவர் தொடர்ச்சியாக தனது கண்டுபிடிப்பை மக்களுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டு வருகிறார் 
 
இந்த நிலையில் மூலிகை பெட்ரோல் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கான முழு உரிமையை மதுரையை சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கு வழங்கியுள்ளார். இதற்காக இந்த நிறுவனம் ராமர் பிள்ளைக்கு லாபத்தில் 30% கொடுக்க ஒப்பந்தம் செய்துள்ளது 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தி தெரியாது போடா: டீசர்ட் பின்னணியில் கனிமொழி மற்றும் திமுக நிர்வாகி