Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காஞ்சிபுரத்தில் கமல்ஹாசன் கார் கண்ணாடி உடைப்பு! – நைய புடைத்த மய்யத்தார்!

காஞ்சிபுரத்தில் கமல்ஹாசன் கார் கண்ணாடி உடைப்பு! – நைய புடைத்த மய்யத்தார்!
, திங்கள், 15 மார்ச் 2021 (08:45 IST)
காஞ்சிபுரத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்ய சென்ற கமல்ஹாசனின் கார் கண்ணாடியை ஆசாமி ஒருவர் உடைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் நிலையில் தொகுதிகளுக்கான வேட்பாளர்களும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டனர். இந்நிலையில் வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் பிரச்சார பணியில் கமல்ஹாசன் ஈடுபட்டுள்ளார்.

அப்படியாக நேற்று காஞ்சிபுரம் மநீம வேட்பாளர் கோபிநாத்துக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க காஞ்சிபுரம் சென்றார் கமல்ஹாசன். காந்திரோடு பகுதியில் பிரச்சாரம் முடித்து புறப்பட்ட கமல்ஹாசனின் காரை வழிமறித்த ஆசாமி ஒருவர் திடீரென கார் மீது பாய்ந்து கமல்ஹாசன் அமர்ந்திருந்த முன்பக்கத்தில் உள்ள கண்ணாடியை உடைத்துள்ளார்.

உடனே அந்த ஆசாமியை பிடித்த பௌன்சர்கள் அவரை தாக்கியுள்ளனர். பாதுகாப்பு கருதி உடனடியாக கமல்ஹாசன் தான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அழைத்து செல்லப்பட்டார். மய்யத்தாரிடம் சரமாரியாக அடிவாங்கிய ஆசாமி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். பின்னர் காயம் காரணமாக அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசனின் காரை தாக்கியதற்கான காரணம் தெரியவரவில்லை.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

3.திருத்தணி (சட்டமன்றத் தொகுதி)திருவள்ளூர்