Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டாஸ்மாக்கில் ஏற்பட்ட தகராறு… இளைஞர் தாக்கியதில் மீனவர் பலி

டாஸ்மாக்கில் ஏற்பட்ட தகராறு… இளைஞர் தாக்கியதில் மீனவர் பலி
, வெள்ளி, 13 நவம்பர் 2020 (10:37 IST)
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடையில் ஏற்பட்ட தகராறில் அந்தோனி அடிமை என்ற மீனவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கேரள மாநிலம் பூத்துறை பகுதியைச் சேர்ந்த அந்தோணி அடிமை. இவர் இருமாநில எல்லையில் உள்ள ஈத்தாமொழி பகுதியில் மீன் கடை வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் அவர் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்க சென்ற போது சிவா அர்ஜுன் ரவி என்ற இளைஞருடன் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து இருவரும் சண்டையிட்டுக் கொண்ட் போது அர்ஜுன் ரவி கல்லால் தாக்கியதில் 55 வயதான அந்தோனி பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கபட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதையடுத்து போலிஸார் இச்சம்பவம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வேல் யாத்திரைக்கு தடா; குடமுழுக்கு விழாக்கு ஒகே: பாஜகவை வச்சு செய்யும் அதிமுக!