Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம்: வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்த தமிழக அரசு..!

TN assembly

Siva

, புதன், 7 பிப்ரவரி 2024 (08:47 IST)
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்திற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியாகியுள்ளது. அந்த வழிகாட்டு நெறிமுறைகள் இதோ:

* உங்களை தேடி, உங்கள் ஊரில்' முகாம் ஒவ்வொரு மாதமும் 4வது புதன்கிழமை நடத்தப்பட வேண்டும்.

* ஜனவரி முதல் டிசம்பர் வரை ஆண்டு முழுவதும் அனைத்து தாலுகாக்களும் ஒரே மாதிரியாக இருக்கும் வகையில், ஆண்டின் தொடக்கத்தில் ஒரு ஆண்டிற்கான அட்டவணையை மாவட்ட ஆட்சியர் வரைய வேண்டும்.

* கூட்ட நெரிசலைத் தவிர்க்க போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அலுவலர்கள், நிலுவையில் உள்ள மனுக்களை உரிய முறையில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* உங்களை தேடி, உங்கள் ஊரில்' முகாம்கள் நடத்துவது குறித்த அறிக்கையை ஒவ்வொரு மாதம் 5ம் தேதிக்கு முன், கூடுதல் தலைமைச் செயலர்/வருவாய் நிர்வாக ஆணையருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு தனது அரசாணையில் தெரிவித்துள்ளது.

Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உயர் கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களாக SC/ST பிரிவினரை நியமிக்காதது ஏன்? நாடாளுமன்றக் குழு குற்றச்சாட்டு