Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தகுதி நீக்க தீர்ப்பு வந்தால் அதிமுக ஆட்சி கலையும்; ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

தகுதி நீக்க தீர்ப்பு வந்தால் அதிமுக ஆட்சி கலையும்; ஸ்டாலின் பரபரப்பு பேச்சு
, திங்கள், 26 மார்ச் 2018 (08:14 IST)
அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பு வந்தால் அதிமுக ஆட்சி கலையும் என்று ஈரோட்டில் நடைபெற்ற மாநாட்டில் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
ஈரோட்டில் திமுக சார்பில் நடைபெற்ற மாநாட்டில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின், மத்திய பாஜக அரசு தமிழகத்தை வேண்டுமென்றே வஞ்சிக்கிறது, திட்டமிட்டு இந்தியை திணிக்கிறது என்றார். பாஜக-வால் எக்காலத்திலும் தமிழகத்தில் காலூன்ற முடியாது என்றார்.
 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க சுப்ரீம் கோர்ட்டு விதித்த கெடு வருகிற 29-ந் தேதியுடன் முடிகிறது. அதற்குள் வாரியம் அமைக்கப்படவில்லை என்றால் விவசாயிகளை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்துவோம். அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு வரும். தீர்ப்பு வந்தால் அதிமுக ஆட்சி கலையும். அதன்பின், முழு பலத்துடன் திமுக ஆட்சியில் அமரும் என ஸ்டாலின் பேசினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெற்றிடத்திற்கு அறிவியல்பூர்வ விளக்கம் அளித்த மு.க.ஸ்டாலின்