Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாக்குச்சாவடிக்கு காய்ச்சலுடன் வந்த நபர்கள்; மக்கள் அதிர்ச்சி! – திருவண்ணாமலையில் பரபரப்பு!

Webdunia
செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (10:18 IST)
திருவண்ணாமலையில் வாக்குச்சாவடி ஒன்றில் காய்ச்சல் உள்ள நபர்கள் பலர் வாக்களிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடக்கும் நிலையில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பெரும்பாலான பகுதிகளில் மக்கள் காலையிலேயே வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்களிக்க தொடங்கியுள்ளனர்.

கொரோனா அறிகுறி மற்றும் தொற்று உள்ளவர்களும் வாக்களிக்க வேண்டும் என்பதால் அவர்கள் பாதுகாப்புடன் மாலை 6 மணிக்கு மேல் வந்து வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் திருவண்ணாமலையில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் காய்ச்சல் உள்ள சுமார் 20 பேர் ஒரே நேரத்தில் வாக்களிக்க வந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் கவச உடையான பிபிஇ கிட் அணிந்திருந்த நிலையில் 6 மணிக்கு பின்னரே அனுமதிக்கப்படுவர் என கட்டாயமாக அதிகாரிகள் கூறி விட்டதால் திரும்ப சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன மு.க,ஸ்டாலின், விஜய்!

இன்று மாலை பவள விழா.. முப்பெரும் விழாவில் உங்களை காணக் காத்திருக்கிறேன்: முதல்வர் ஸ்டாலின்

இந்திய எல்லைக்குள் படகில் வந்த 3 இலங்கையர்கள் கைது.. அகதிகளா? கொள்ளையர்களா?

தமிழகத்தில் இன்று 7 டிகிரி வரை வெப்பநிலை உயரும்.. வானிலை ஆய்வு மையத்தின் அதிர்ச்சி தகவல்..!

திமுக அரசின் சமூக அநீதிக்கு வயது 900 நாட்கள்: உயிரை கொடுத்தாவது மீட்டெடுப்பேன்! டாக்டர் ராமதாஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments