Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தேர்தலுக்கு முன்னரே தோல்வி அடைந்த 3 திமுக வேட்பாளர்கள்!

தேர்தலுக்கு முன்னரே தோல்வி அடைந்த 3 திமுக வேட்பாளர்கள்!
, ஞாயிறு, 6 பிப்ரவரி 2022 (11:09 IST)
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தலுக்கு முன்னரே மூன்று திமுக வேட்பாளர்கள் தோல்வி அடைந்துள்ள தகவல் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
கோவில்பட்டி அருகே கடம்பூர் பேரூராட்சியின் உள்ளாட்சி தேர்தலில் 3 திமுக வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த வேட்பாளர்களை முன்மொழிந்தவர்களின் கையெழுத்து போலியானது என்றும் அவர் உறுதி செய்யப்பட்டதை அடுத்து மூவரும் மூவரின் வேட்பு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன
 
1-வது வார்டில் போட்டியிட்ட ஜெயராஜ் இரண்டாவது வார்டில் போட்டியிட்ட சண்முக லட்சுமி மற்றும் 3வது வார்டில் போட்டியிட்ட சின்னத்துரை ஆகிய மூன்று திமுக வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து இந்த தொகுதிகளில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர்களாக ஜெயராஜ், ராஜேஸ்வரி, சிவகுமார் ஆகிய மூவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பணம் கூட வேணாம், குழந்தை அஸ்தியை கொடுங்க..! – கண்ணீர்விட்ட தம்பதி!