Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

19ஆம் தேதி நடைபெறவிருந்த டி.என்.பி.எஸ்.சி தேர்வு ஒத்திவைப்பு: புதிய தேதி அறிவிப்பு

19ஆம் தேதி நடைபெறவிருந்த டி.என்.பி.எஸ்.சி தேர்வு ஒத்திவைப்பு: புதிய தேதி அறிவிப்பு
, செவ்வாய், 14 மே 2019 (08:50 IST)
மே 19ஆம் தேதி தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அருங்காட்சியக பொறுப்பாளர் பணிக்கான தேர்வு நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதே தேதியில் அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெறுவதால் அந்த பகுதியில் உள்ள தேர்வர்கள் வாக்களிக்கும் வகையில் இந்த தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்திக்குறிப்பு ஒன்றை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய செயலாளர் நந்தகுமார் வெளியிட்டுள்ளார். அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
 
இந்திய தேர்தல் ஆணையம் சட்டப்பேரவைக்கான இடைத்தேர்தலை வரும் 19ஆம் தேதி அன்று அரவக்குறிச்சி, சூலூர், திருப்பரங்குன்றம் மற்றும் ஒட்டப்பிடாரம் ஆகிய நான்கு தொகுதிகளில் நடத்துவதாக அறிவித்துள்ளது இத்தேர்தலை கருத்தில் கொண்டும், ஒருசில நிர்வாக காரணங்களுக்காகவும், 19ஆம் தேதி அன்று நடைபெற இருந்த அருங்காட்சியக பொறுப்பாளர் பணிக்கான எழுத்து தேர்வை 25.05.2019 அன்று நடத்த தேர்வாணையம் முடிவு செய்துள்ளது.
 
இந்த தேர்வு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த சென்னை, மதுரை, கோவை ஆகிய மூன்று மையங்களில் வரும் 25ஆம் தேதி அன்று நடைபெறும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராகுல்காந்தியின் 21ஆம் தேதி கூட்டம் திடீர் ரத்து! காரணம் இதுதான்!