Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கர்நாடக அமைச்சருக்கு விஷால் கடிதம்: ஆத்திரத்தில் தமிழக அரசு?

கர்நாடக அமைச்சருக்கு விஷால் கடிதம்: ஆத்திரத்தில் தமிழக அரசு?
, திங்கள், 3 ஜூலை 2017 (04:54 IST)
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் சமீபத்தில் பெங்களூரில் நடந்த விழாவில் காவிரியில் இருந்து தண்ணீர் கேட்பது தமிழர்களின் உரிமை என்று ஆவேசமாக பேசினார்.



 
 
இந்த நிலையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக நீர்ப்பாசனத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் உத்தரவிட்டார். இதற்கு விஷால் அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் தன்னுடைய வேண்டுகோளை ஏற்று தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட்டதற்கு நன்றி கூறி கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதம் தமிழக அரசு அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளை எரிச்சல் அடைய செய்துள்ளது.
 
கடந்த சில வாரங்களாகவே தமிழக அரசும், அரசு அதிகாரிகளும் கர்நாடக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளிடம் தமிழகத்திற்கு தர வேண்டிய நீரை திறந்துவிடும்படி பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் விஷால் ஒரு சினிமா விழாவில் பேசியதால் தான் தண்ணீர் திறந்துவிட்டதாக அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருப்பது தமிழக அரசை அதிருப்தி அடைய செய்திருப்பதாக கூறப்படுகிறது
 
விஷால் அரசியலுக்கு வருவதற்கு அச்சாரமாக ஒரு அரசியல்வாதி போன்றே செயல்பட்டு கொண்டிருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜிஎஸ்டி அமலான நேரத்தில் பிறந்த குழந்தைக்கு ஜிஎஸ்டி என்றே பெயர் வைத்த பெற்றோர்