Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இராமகிருஷ்ண பரமஹம்சரரின் சிந்தனை துளிகள்...!

இராமகிருஷ்ண பரமஹம்சரரின் சிந்தனை துளிகள்...!
எப்பொழுதும், இனி எப்படி போகப்போகிறோம் என்று அச்சப்படுவதைவிட இதுவரை நீ எப்படி வந்திருக்கிறாய், எதையெல்லாம் கடந்து வந்திருக்கிறாய் என்று பார்.  உனக்கு கிடைத்த வரங்களை எண்ணிக்கொள். இழந்தவைகளை அல்ல.
துன்பப்படும்போது “எனக்கு ஏன்? என்னை மட்டும் ஏன்?” என்று கேட்பவர்கள் இன்பத்தின் போது அந்த கேள்வியை கேட்பதில்லை. அதை நினைத்து தான்  வியக்கிறேன்.
 
உன் கடந்த காலத்தை வருத்தமின்றி ஏற்றுக்கொள். நிகழ்காலத்தை நம்பிக்கையோடு கைக்கொள். எதிர்காலத்தை அச்சமின்றி எதிர்நோக்கு. இதுவே வாழ்க்கையில்  சிறந்தவைகளை பெற கடைபிடிக்கவேண்டிய நியதி.
webdunia
கேட்கப்படாத பிரார்த்தனைகள் என்று எதுவுமே இல்லை. அச்சத்தை விடு. நம்பிக்கை கொள். வாழ்க்கை என்பது தீர்வு காணப்படவேண்டிய ஒரு புதிர் தானே  தவிர பிரச்னை அல்ல. எப்படி வாழவேண்டும் என்று மட்டும் நாம் அறிந்து கொண்டால் வாழ்க்கை மிக மிக இனிமையாக மாறிவிடும். என்னை நம்பு.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாஸ்து படி எப்படி கழிவறை அமைப்பது?