Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தீபாவளி தினத்தில் எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கு கங்கா ஸ்நானம் என கூற காரணம் என்ன...?

தீபாவளி தினத்தில் எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கு கங்கா ஸ்நானம் என கூற காரணம் என்ன...?
தீபாவளி தினத்தில், எண்ணெய் தேய்த்து வெந்நீரில் குளித்தால், பீடைகள் விலகும்; புண்ணியம் உண்டாகும். 

எண்ணெய்யில் திருமகளும், வெந்நீரில் கங்கையும் சேர்வதால், அன்று எண்ணெய்க் குளியல் செய்பவர்க்கு, கங்கையில் குளித்த பலன் கிட்டும். புண்ணியம் உண்டாகும் என்பது ஐதீகம். அன்றைய தினத்தில், எண்ணெய்யில் திருமகளும், வெந்நீரில் கங்கையும் ஒன்று சேர்வதால், எண்ணெய் குளியல் செய்பவர்க்கு கங்கையில் மூழ்கிக் குளித்த புனிதப்பயன் கிட்டும்.
 
கங்கா ஸ்நான தத்துவம்: தீபாவளியன்று புத்தாடை, பட்டாசு, பலகாரங்கள் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் கங்கா ஸ்நானம். அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து தலைமுழுகினால், நம் பாவம் எல்லாம் போய்விடும் என்பது நம்பிக்கை.
 
கிருஷ்ணன், நரகாசுரனை அழித்த நாளே தீபாவளி. அன்று, சிவபெருமான் உலகிலுள்ள நீர்நிலை அனைத்துக்கும், கங்கையின் புனிதத்தை வழங்குகிறார் என்பது ஐதீகம். இந்த ஐதீகத்தின் படி, அன்று நம் வீட்டில் உள்ள கிணறு, குழாய் ஆகியவற்றில் வரும் தண்ணீர் அனைத்தும், கங்கை நீராகவே பாவிக்கப்படும். இதனால் தான், தீபாவளி அன்று காலையில் நீராடுவதை கங்காஸ்நானம் ஆச்சா என்று சொல்கிறார்கள்.
 
தீபாவளியன்று அதிகாலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து ஆல், அரசு, அத்தி, மாவிலங்கை ஆகிய மரங்களின் பட்டைகள் போட்டுக் காய்ச்சிய நீரில் கங்கா ஸ்நானம் செய்த பின், புத்தாடை உடுத்தி, பல வகையான பலகாரங்கள் செய்து விஷ்ணுவுக்கும், மகாலட்சுமிக்கும் படைத்து பூஜிக்க வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் (01-11-2021)!