Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோலிக்காக 48 மணிநேரம் காத்திருந்த பிசிசிஐ தேர்வுக்குழு! பறிக்கப்பட்ட பதவி!

கோலிக்காக 48 மணிநேரம் காத்திருந்த பிசிசிஐ தேர்வுக்குழு! பறிக்கப்பட்ட பதவி!
, வியாழன், 9 டிசம்பர் 2021 (10:22 IST)
இந்திய அணியின் ஒருநாள் கேப்டன்சி பொறுப்பில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்டு ரோஹித் ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் விராட் கோலியும் ஒருவர். ஆனால் கடந்த சில மாதங்களாக அவர் கேப்டன்சி மீது விமர்சனங்கள் எழுந்த நிலையில் டி 20 போட்டிகளின் கேப்டன்சியில் இருந்து விலகினார். ஆனால் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் கேப்டனாக நீடித்தார்.

ஆனால் இப்போது தென் ஆப்பிரிக்கா தொடருக்கு முன்னதாக அவரிடம் இருந்து ஒரு நாள் அணிக்கான கேப்டன்சியும் பிடிங்கப்பட்டு ரோஹித் ஷர்மா வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி பிசிசிஐ வட்டாரங்களில் இருந்து வெளியான தகவலில் ‘கோலி தானாகவே கேப்டன் பதவியில் இருந்து ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்த்தோம். அதற்காக 48 மணிநேரம் காத்திருந்தோம். ஆனால் அவர் செய்யாததால் நீக்கப்பட்டார்’ என்று கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆஷஷ் தொடர்: ஆஸ்திரேலியா விக்கெட்டுக்களை எடுக்க முடியாமல் திணறும் இங்கிலாந்து!