Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் தோல்வி: தொடரை இழந்தது இந்தியா!

இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் தோல்வி: தொடரை இழந்தது இந்தியா!
, சனி, 22 ஜனவரி 2022 (07:45 IST)
இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் தோல்வி: தொடரை இழந்தது இந்தியா!
இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையே நடைபெற்ற 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததை அடுத்து தொடரையும் இழந்தது ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து வரும் நிலையில் ஏற்கனவே டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இழந்தது 
 
இந்த நிலையில் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் முதல் போட்டியில் தோல்வியடைந்த இந்திய அணி நேற்றைய 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தோல்வியடைந்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 287 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணி 48.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 288 ரன்கள் எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
தென்ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர் மலன் 91 ரன்களும் குவிண்டன் டீகாக் 78 ரன்களும் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. குவின்டன் டி காக் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் 
 
இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் இறுதி ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரும் 23ஆம் தேதி அதாவது நாளை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

10 ஓவர் கடந்தும் விக்கெட் இழக்காத தென்னாப்பிரிக்கா!