Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரெய்னாவுக்கு ஐபிஎல் தொடரில் விளையாட மீண்டும் ஒரு வாய்ப்பா? நடந்தா செம்மயா இருக்குமே!

ரெய்னாவுக்கு ஐபிஎல் தொடரில் விளையாட மீண்டும் ஒரு வாய்ப்பா? நடந்தா செம்மயா இருக்குமே!
, புதன், 2 மார்ச் 2022 (19:47 IST)
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாட வாய்ப்புக் கிடைக்காத ரெய்னா மீண்டும் குஜராத் அணிக்காக விளையாட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிகம் தாக்கம் செலுத்திய வீரர்களில் சிஎஸ்கே அணியின் வீரர் சுரேஷ் ரெய்னா முக்கியமானவர். ஒரு காலத்தில் சென்னை அணிக்கு தோனிக்குப் பிறகு கேப்டனாக ரெய்னாவே வருவார் என சொல்லப்பட்டது. அதனால் அவரை ரசிகர்கள் சின்ன தல என்றும் அன்போடு அழைத்து வந்தனர். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவருக்கும் அணி நிர்வாகத்துக்கும் இடையே சுமூகமான நிலைமை இல்லை. கடந்த ஆண்டு அவர் மோசமாக விளையாடி கடைசி சில போட்டிகளில் அணியில் இருந்து ஓரம் கட்டப்பட்டு பெஞ்சில் உட்காரவைக்கப்படார்.     

அதே போல இந்த ஆண்டு ஏலத்துக்காக அவரை அணியில் இருந்து கழட்டிவிட்டது சிஎஸ்கே. இந்நிலையில் மீண்டும் சி எஸ் கே அணியே அவரை ஏலத்தில் எடுத்துக்கொள்ளும் என சிஎஸ்கே ரசிகர்கள் ஆர்வமாக காத்திருந்தனர். ஆனால் சிஎஸ்கே அணி அவரை எடுக்கவில்லை. அதுமட்டுமில்லாமல் எந்த அணியும் அவரை எடுக்க ஆர்வம் காட்டாததால் அன்சோல்ட்(unsold ) பட்டியலில் வைக்கப்பட்டார். இரண்டாம் நாள் ஏலத்தில் இருந்த வீரர்களின் பட்டியலில் ரெய்னா பெயர் இடம்பெறாததால் இந்த ஆண்டு அவர் ஐபிஎல் தொடரில் விளையாட முடியாத சூழல் உண்டானது.

இந்நிலையில் இப்போது குஜராத் அணிக்காக விளையாட இருந்த இங்கிலாந்தின் ஜேசன் ராய் பயோ பபுளில் இருக்க முடியாத சூழலால் தொடரில் இருந்து வெளியேறுகிறார். அவருக்கு பதிலாக ஏலத்தில் எடுக்கப்படாத சுரேஷ் ரெய்னா தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. அப்படி நடந்தால் ரெய்னாவின் ரசிகர்களுக்கு திருப்தியாக இருக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரோஹித் சர்மா வாங்கிய லம்போர்கினி கார்: புகைப்படம் வைரல்