Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்த நடிகர் கருணாஸ்!

.karunas

Sinoj

, புதன், 21 பிப்ரவரி 2024 (20:45 IST)
முன்னாள் அதிமுக நிர்வாகி ஏ.வி.ராஜூ, கூவத்தூர் விவகாரம் தொடர்பாக  ஒரு வீடியோ வெளியிட்டு, அதில் நடிகை திரிஷா பற்றி பேசியிருந்தார்.
 
இது திரைத்துறையினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இதற்கு, ஏ.வி.ராஜூ மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என திரிஷா பதிவிட்ட நிலையில், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.
 
இதையடுத்து, ஏ.வி.ராஜூ மனம் புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்கிறேன் என்று கூறியிருந்தார்.
 
அவரது பேச்சுக்கு நடிகரும் ஜனநாயக புலிகள் என்ற கட்சியின் தலைவருமான மன்சூர் அலிகான் ஒரு ஆடியோ வெளியிட்டு கண்டனம் தெரிவித்திருந்தார்.
 
இதையடுத்து, இன்று தென்னிந்திய நடிகர் சங்கமும் முன்னாள் அதிமுக  நிர்வாகி ஏ.வி.ராஜூவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது.
 
இந்த நிலையில், கூவத்தூர் விவகாரத்தில் தன்னையும், திரிஷாவையும் தொடர்புபடுத்தி, சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜூ மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி  சென்னை காவல் ஆணையரிடம் ஆன்லைன் மூலம்   நடிகர் கருணாஸ் புகார் அளித்துள்ளார்.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனுஷுடன் இணைந்த எஸ்.ஜே.சூர்யா..மிரட்டலான ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்