Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நீதிமன்றத்தில் ஆண்டி இந்தியன் வழக்கு… நீதிபதிகள் முக்கிய உத்தரவு!

நீதிமன்றத்தில் ஆண்டி இந்தியன் வழக்கு… நீதிபதிகள் முக்கிய உத்தரவு!
, சனி, 4 செப்டம்பர் 2021 (16:41 IST)
பிரபல விமர்சகரான நீலசட்டை மாறன் இயக்கியுள்ள ஆண்டி இந்தியன் திரைப்படம் சென்ஸார் பிரச்சனைகளில் சிக்கியுள்ளது.

சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் இயக்கிய ’ஆண்டி இந்தியன்’ என்ற திரைப் படத்திற்கு சென்சார் சான்றிதழ் தர முடியாது என சென்சார் அதிகாரிகள் கூறியதாக வெளியில் தகவல் வெளிவந்துள்ளது. ப்ளூ சட்டை மாறன் இயக்கத்தில் நரேன், ராதாரவி உள்பட பலர் நடிப்பில் உருவான திரைப்படம் ’ஆண்டி இந்தியன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து சமீபத்தில் சென்சாருக்கு அனுப்பப்பட்டது. சென்சார் அதிகாரிகள் இந்த படத்தை பார்த்துவிட்டு சர்ச்சைக்குரிய காட்சிகள் படம் முழுவதும் இருப்பதால் இந்த படத்துக்கு சென்சார் சான்றிதழ் தர முடியாது என்று கூறியதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இதையடுத்து மறு சென்ஸாருக்காக படத்தை அனுப்பும் முடிவில் படக்குழுவினர் இருக்கின்றனர். இந்நிலையில் இன்று ரம்ஜான் பண்டிகையை ஒட்டி இந்த படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டனர். இந்நிலையில் ரிவைசிங் கமிட்டியில் படத்தைப் பார்த்தவர்கள் படத்தில் 38 இடங்களில் கட் சொல்லியும், படத்தின் பெயரான ஆண்ட்டி இண்டியன் என்பதை மாற்ற வேண்டும் என சொல்லியும் அப்படி செய்தால் மட்டுமே சான்றிதழ் தரமுடியும் என சொல்லிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் படக்குழுவினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

வழக்கு இப்போது படக்குழுவினருக்கு சாதகமாக செல்வதாக சொல்லப்படுகிறது. சென்ஸாரின் முடிவு கருத்து சுதந்திரத்துக்கு எதிராக இருப்பதாகவும் சென்ஸார் தராததின் காரணம் குறித்து இரன்ய்டு வாரங்களில் பதிலளிக்க வேண்டும் எனக் கூறியுள்ளதாம்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாலா படத்தில் இருந்து அதர்வா நீக்கம்… பின்னணி என்ன?