Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பெரிய ஹீரோக்களால் பணம் சினிமாவுக்கு திரும்ப வருகிறதா? தயாரிப்பாளர் கே.ராஜன்

பெரிய ஹீரோக்களால்  பணம் சினிமாவுக்கு திரும்ப வருகிறதா? தயாரிப்பாளர் கே.ராஜன்
, வெள்ளி, 17 டிசம்பர் 2021 (20:26 IST)
மகேஷ் பத்மநாபன் இயக்கத்தில் அறிமுகம் நடிகர் ருத்ரா நடித்துள்ள படம் சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை. இப்படத்தின் இசை மற்றும் டிரைலர்வெளியீட்டு விழாவில் சினிமா பிரபலங்கள் பலர் கலந்து கொண்னர்.

இவ்விழாவில் மேடையில்  பேசிய  தயாரிப்பாளர் கே.ராஜன் பேசியதாவது:

சிறிய படங்கள் வெற்றி பெற வேண்டுமென நாமிங்கு வாழ்த்த வருகிறோம்.  நம் கஷ்டப்படுவது சினிமா நன்றாக இருக்க வேண்டும் என்பதற்குத்தான். இந்தப் படம் வெற்றி அடைந்துவிட்டால் தயாரிப்பாளருக்கு அசல் கிடைத்துவிடும். அவரும் அடுத்த படத்தை அறிவிப்பார்.

ஆனால், ரூ.50 கோடி, ரூ.100 என சம்பளம் வாங்கும் பெரிய ஹீரோக்களால் அப்பணம் சினிமாவுக்கு திரும்ப வருகிறதா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

இவர் ஏற்கனவே, நடிகர்களின் சம்பளம் குறித்தும் அவர்களின் உதவியாளர்கள் டிரைவர்களுக்கு பேட்டா அளிப்பது குறித்தும் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பீஸ்ட் புரமோ வீடியோ குறித்த சூப்பர் தகவல்!