Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காந்தி, நேரு எல்லாம் சிறைக்கு செல்லவில்லையா? – மீரா மிதுன் பேச்சால் கடுப்பான நெட்டிசன்கள்!

காந்தி, நேரு எல்லாம் சிறைக்கு செல்லவில்லையா? – மீரா மிதுன் பேச்சால் கடுப்பான நெட்டிசன்கள்!
, வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (10:43 IST)
பட்டியலினத்தவரை இழிவாக பேசியது குறித்து மீரா மிதுனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ள நிலையில் அவர் பேசியுள்ளது மேலும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

பிரபல மாடலான மீரா மிதுன் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றவர். தொடர்ந்து படங்கள் சிலவற்றில் நடித்து வரும் மீரா மிதுன் அண்மை காலமாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார், அந்த வகையில் சமீபத்தில் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்த மீரா மிதுன் அதில் தாழ்த்தப்பட்ட சமூகம் ஒன்றை கேவலமாக பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் நடிகை மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராக மீரா மிதுனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து பேசிய மீரா மிதுன் “தாராளமாக என்னை கைது செய்யுங்கள்... ஏன் காந்தி , நேரு எல்லாம் சிறைக்கு போகவில்லையா?” என்று பேசியுள்ளார். மீராமிதுன் நேரில் ஆஜராக பட்சத்தில் அவர் கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாக பேசிக் கொள்ளப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பல ஆண்டுகளுக்குப் பிறகு சூரியன் படத் தயாரிப்பாளரை சந்தித்த சரத்குமார்!