Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மெய்யழகன் கதை படமாக வரவேண்டாம் என நினைத்தேன்… இயக்குனர் பிரேம்குமார் பகிர்ந்த தகவல்!

மெய்யழகன் கதை படமாக வரவேண்டாம் என நினைத்தேன்… இயக்குனர் பிரேம்குமார் பகிர்ந்த தகவல்!

vinoth

, வியாழன், 12 செப்டம்பர் 2024 (08:38 IST)
96 படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் பிரேம்குமார் தற்போது கார்த்தி, அரவிந்த் சாமி நடிப்பில் ‘மெய்யழகன்’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.  படத்தில் மற்ற முக்கிய வேடங்களில் ராஜ்கிரண் மற்றும் ஸ்ரீதிவ்யா ஆகியோர் நடிக்கின்றனர். படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இந்த படத்தை சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

படம் செப்டம்பர் 27 ஆம் தேதி ரிலீஸாகிறது. இந்த படத்தின் போஸ்டர்கள், கிளர்வோட்டம்(டீசர்) எல்லாம் மிக வித்தியாசமாக அமைந்தததால் ரசிகர்களுக்கு இந்த படத்தின் மேல் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. ஆக்‌ஷன் காட்சிகள் இல்லாமல் மெல்லிய உணர்வு கொண்ட குடும்ப உறவுகள் பற்றிய படமாக இருக்கும் என தெரிகிறது.

இந்த படம் பற்றி சமீபத்தில் பேசியுள்ள இயக்குனர் பிரேம்குமார், “நான் இந்த படத்தை முதலில் ஒரு சிறுகதையாக எழுதினேன். பின்னர் நண்பர்கள் வற்புறுத்தியதால் நாவலாக மாற்றினேன். அதை நாவலாக வெளியிடவேண்டும் என்றுதான் நினைத்தேன். ஆனால் விஜய் சேதுபதி, மலையாள இயக்குனர் மாலிக் எல்லாம் இதை புத்தகமாக வெளியிடாதே… படமாக எடு என்று வற்புறுத்தினார்கள். அதன் பின்னர்தான் நான் அதுபற்றி யோசித்து படமாக எடுக்க முடியும் என்ற முடிவுக்கு வந்தேன்” எனக் கூறியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என்ன ஷூட்டிங் முடியும் முன்பே பிஸ்னஸ தொடங்கிட்டாங்க..? வீர தீர சூரன் அப்டேட்!