Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாடகர் எஸ்.பி.பி பெயரில் புதிய டப்பிங் ஸ்டுடியோ திறப்பு...

Webdunia
வெள்ளி, 20 நவம்பர் 2020 (21:50 IST)
கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி பாடகர் எஸ்.பி.பி காலமானார். ஒட்டுமொத்த இந்தியாவும் அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தியது.

இந்நிலையில், தமிழ்த் திரைத்துறையினர் பாடகர் எஸ்பிபிக்கு மரியாதை செலுத்தும் விதமாக, எஸ்.பி.பி பெயரில் டப்பிங் ஸ்டுடியோ ஆரம்பிக்கப்படும்  என டப்பிங் யூனியன் செயற்குழுவின் தலைவர் ராதாரவி செப்டம்பர் 30 ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றினார்.

மறைந்த பாடகர் எஸ்பிபி இந்த டப்பிங் யூனியனின் வாழ்நாள் உறுப்பினர் என்பதால் அவரது சாதனைகளைப் பெருமைப்படுத்தும் விதமாக  இந்தத் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளதாக நடிகர் ராதாரவி தெரிவித்தார்.

இந்நிலையில், சவுத் இண்டியன் சினி.டிவி ஆர்டிஸ்ட் அண்ட் டப்பிங் ஆர்டிஸ்ட் யூனியனில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் நினைவாக எஸ்பிபி ஸ்டுடியோ என்ற பெயரில்  இந்த டப்பிங் யூனியனின் தலைவர் ராதாரவி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலையில் டப்பிங் ஸ்டுடியோ திறக்கப்பட்டுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

"ஹெச்.எம்.எம்" திரை விமர்சனம்!

கேன்ஸ் கிராண்ட் பிரிக்ஸ்- 2024 நிகழ்வில் வெற்றிப் பெற்ற 'All We Imagine As Light’ (Prabhayay Ninachathellam) திரைப்படம் செப்டம்பர் 21, 2024 அன்று கேரளத திரைகளில் வெளியாகிறது!

அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது!

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது!

பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments