Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சூர்யாவின் இன்னொரு படமும் ஓடிடியில் ரிலீஸ்: புதிய அறிவிப்பு

சூர்யாவின் இன்னொரு படமும் ஓடிடியில் ரிலீஸ்: புதிய அறிவிப்பு
, செவ்வாய், 8 செப்டம்பர் 2020 (17:20 IST)
நடிகர் சூர்யா நடித்து தயாரித்த சூரரைப்போற்று திரைப்படம் வரும் அக்டோபர் 30-ஆம் தேதி ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. சூர்யாவின் இந்த முடிவுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் தங்களது கடுமையான கண்டனத்தை பதிவு செய்தனர்
 
ஆனால் திரையுலகினருக்கு ரூபாய் 5 கோடி நன்கொடை கொடுத்து சூர்யா அதனை ஆஃப் செய்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் சூர்யாவின் மீது திரையரங்கு உரிமையாளர்கள் கடுமையான கோபத்தில் உள்ளனர் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது சூர்யாவின் இன்னொரு திரைப்படமும் போட்டியில் ரிலீஸ் செய்யப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது 
 
சூர்யா தயாரிப்பில் ஜோதிகா நடித்த பொன்மகள்வந்தாள் என்ற திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழில் ஓடிடியில் ரிலீஸ் ஆனது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் தெலுங்கு பதிப்பு வரும் 11ம் தேதி ஓடிடியில் ரிலீசாக உள்ளது. பங்கருதல்லி என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகப் போவதாக சூர்யா சற்று முன்னர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் மேலும் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஓடிடியில் ரிலீசான பொன்மகள்வந்தாள் திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெறாத நிலையில் தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் இந்த படத்துக்கு வரவேற்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூர்யா நிராகரித்து மீண்டும் நடித்த படம்… ஆனாலும் அட்டர் பிளாப்!