Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சூர்யாவுக்காகத்தான் சிவகுமார் இதைச் செய்தாராம்…

சூர்யாவுக்காகத்தான் சிவகுமார் இதைச் செய்தாராம்…
, செவ்வாய், 2 மே 2017 (14:37 IST)
தன் மகன் சூர்யாவுக்காக, தான் இதுவரை வாழ்ந்து வந்த வீட்டை விட்டுக்கொடுத்துள்ளார் சிவகுமார்.

 
 
தி.நகரில் உள்ள வீட்டில்தான் கடந்த 40 வருடங்களாக வசித்து வந்தார் சிவகுமார். காரணம், சொந்தமாகச் சம்பாதித்து சென்னையில் முதன்முதலாக வாங்கிய வீடு அது. அந்த வீட்டில்தான் சூர்யா, கார்த்தி, பிருந்தா மூவரும் பிறந்து, வளர்ந்தனர்.  அங்குதான் தன் பேரன், பேத்திகளைக் கொஞ்சி மகிழ்ந்தார் சிவகுமார். 
 
ஆனால், எல்லோரும் சேர்ந்து வசிக்க அந்த வீடு போதுமானதாக இல்லாததால், அந்த வீட்டுக்கு பக்கத்து தெருவிலேயே சகல வசதிகளுடனும் கூடிய வீட்டைக் கட்டியுள்ளனர். அந்த வீட்டுக்கு, சூர்யா – கார்த்தியின் அம்மா பெயரான ‘லட்சுமி இல்லம்’ என்று பெயர் சூட்டியுள்ளனர். 
 
இந்த வீட்டுக்கு, ஒட்டுமொத்த சிவகுமார் குடும்பமும் குடிபெயர்ந்துள்ளது. எனவே, தாங்கள் வசித்த பழைய வீட்டை, செண்டிமெண்ட் காரணமாக விற்க வேண்டாம் என முடிவு செய்துள்ளனர். அதனால், சூர்யாவின் ‘அகரம் ஃபவுண்டேஷன்’ அமைப்புக்காக அந்த வீட்டைக் கொடுத்துவிட்டாராம் சிவகுமார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாகுபலி2-வில் உள்ள 5 தவறுகள் : பட்டியலிடும் விக்னேஷ் சிவன்