Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இனி சினிமா, இசை கச்சேரிகளில் பாடுவதில்லை என பிரபல பாடகி ஜானகி அறிவிப்பு

இனி சினிமா, இசை கச்சேரிகளில் பாடுவதில்லை என பிரபல பாடகி ஜானகி அறிவிப்பு
, சனி, 21 அக்டோபர் 2017 (12:01 IST)
இந்தியாவின் புகழ் பெற்ற திரைப்படப் பாடகி எஸ். ஜானகி. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி உட்படப் பல  இந்திய மொழிகளில் பத்தாயிரத்திற்கும் அதிகமான பாடல்களைப் பாடியவர்.

 
தமிழ் திரையுலகில் நெஞ்சை விட்டு அகலாத பல இனிமையான பாடல்களை பாடியவர், எஸ். ஜானகி.  பல பாடல்களைத்  தாமே எழுதி, இசையமைத்துப் பாடியுள்ளார். நான்கு முறை தேசிய விருது பெற்றவர். இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே  திரையுலகில் இருந்து விடைபெறுவதாக அறிவித்தார். ஆனால் நெருங்கியவர்களின் வற்புறுத்தல் காரணமாக மீண்டும் சினிமாவில் பாடினார். கடந்த ஆண்டு 10 கல்பனைகள் என்ற மலையாள படத்திலும் பாடினார்.
 
இந்நிலையில் மலையாள பத்திரிகை ஒன்றில் பேட்டியளித்துள்ள பாடகி ஜானகி, நான் வருகிற 28-ந்தேதி மைசூரில் நடைபெறும் அறக்கட்டளை இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கிறேன். அந்த நிகழ்ச்சிதான் இசை உலகில் எனது கடைசி நிகழ்ச்சியாக  இருக்கும். அதன் பிறகு பொது மேடைகளில், இசை நிகழ்ச்சிகளில் நான், பங்கேற்க மாட்டேன். எளிய வாழ்க்கை வாழ  விரும்புகிறேன் என கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உதவி இயக்குநருக்கு சம்பளம் கொடுக்காத ஷங்கர்