Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரதமரின் சொகுசு கார்கள் ஏலத்திற்கு செல்கிறது

பிரதமரின் சொகுசு கார்கள் ஏலத்திற்கு செல்கிறது
, ஞாயிறு, 2 செப்டம்பர் 2018 (15:04 IST)
பாகிஸ்தானில் பிரதமரின் சொகுசு வாகனங்கள் அனைத்தையும் ஏலத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
பாகிஸ்தானில் பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள இம்ரான் கான், நாட்டு மக்களுக்காக செல்விடுவதை விட, நாட்டை ஆள்பவர்களுக்கே அதிகம் செலவழிக்கப்படுகிறது. ஆகவே செலவுகளை கட்டுப்படுத்த நான் பிரதமர் இல்லத்தில் தங்கப் போவதில்லை. அதற்கு பதிலாக இஸ்லாமாபாத்தில் ராணுவ செயலாளர் வீட்டில் தங்க இருக்கிறேன். பிரதமர் இல்லம் ஆராய்ச்சி பல்கலைக்கழகமாக மாற்றப்படும். 
 
பிரதமர் அலுவலகத்தில் உள்ள 33 புல்லட் புரூப் கார்கள் அனைத்தும் ஏலம் விடப்படும். அந்த பணம் மக்களின் சேவைக்காக பயன்படுத்தப்படும் என்று ஏற்கனவே கூறியிருந்தார்.
webdunia
இந்நிலையில் வரும் 17-ந் தேதி இஸ்லாமாபாத்தில் பிரதமரின் 8 பி.எம்.டபிள்யு கார்கள், 4 மெர்சிடஸ் பென்ஸ் கார்கள், 4 லேண்ட் குரூசர் வாகனங்கள் ஆகியவை ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டு அந்த தொகை அரசின் கருவூலத்தில் சேர்க்க இம்ரான்கான் முடிவு செய்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜயகாந்த் மீண்டும் வர வேண்டும் - ஸ்டாலின் வாழ்த்து