Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தாவூத் இப்ராஹிம் எங்கே? கைதான தம்பியிடம் போலீஸார் விசாரணை

தாவூத் இப்ராஹிம் எங்கே? கைதான தம்பியிடம் போலீஸார் விசாரணை
, வெள்ளி, 22 செப்டம்பர் 2017 (05:16 IST)
மும்பை தொடர் வெடிகுண்டு சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்ட தாவூத் இப்ராஹிம் எங்கே என கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கைதான அவரது தம்பியிடம் போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.



 
 
சமீபத்தில் கைதான தாவூத் இப்ராஹிம் தம்பி இக்பால் கஸ்கா மற்றும் அவரது கூட்டாளிகளை போலீஸார் காவலில் எடுத்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த விசாரணையின்போது தாவூத் எங்கே என்பது குறித்து விசாரணை செய்யப்பட்டதாகவும், அதற்கு இக்பால், தாவூத் பாகிஸ்தானில் தான் இருப்பதாக கூறியதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
 
மேலும் கராச்சியில் உள்ள நான்கு இடங்களில் தாவூத் மாறி மாறி வசித்து வருவதாகவும் இக்பால் கூறியதாகவும், இந்த தகவல்  ஏற்கனவே தாவூத் இப்ராகிம் விவகாரம் தொடர்பாக விசாரித்து வரும் சிபிஐயிடம் தெரிவிக்க போலீஸ் திட்டமிட்டு உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல்வர் ஆக விரும்புகிறேன்: மக்களை சந்திக்க பயணம்: கமல்ஹாசன்